சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
4.112   திருநாவுக்கரசர்   தேவாரம்   வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்;
பண் - திருவிருத்தம்   (பொது -தனித் திருவிருத்தம் )
Audio: https://www.youtube.com/watch?v=IGooaC72-8s
4.113   திருநாவுக்கரசர்   தேவாரம்   பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத்
பண் - திருவிருத்தம்   (பொது -தனித் திருவிருத்தம் )
Audio: https://www.youtube.com/watch?v=wu5z8bfU81s

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.112   வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்;  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் பொது -தனித் திருவிருத்தம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்; வீழ்ந்து இலங்கு
வெள்ளிப் புரி அன்ன வெண் புரிநூலன் விரிசடைமேல்
வெள்ளித் தகடு அன்ன வெண்பிறை சூடி, வெள் என்பு அணிந்து,
வெள்ளிப் பொடிப் பவளப்புறம் பூசிய வேதியனே.

[1]
உடலைத் துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்பக்
கடலைக் கடந்து, உய்யப் போயிடல் ஆகும்; கனகவண்ணப்
படலைச் சடை, பரவைத் திரைக் கங்கை, பனிப்பிறை, வெண்
சுடலைப் பொடி, கடவுட்கு அடிமைக்கண்-துணி, நெஞ்சமே!

[2]
முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும்; இம் மூ உலகுக்கு
அன்னையும் அத்தனும் ஆவாய்-அழல்வணா!-நீ அலையோ?
உன்னை நினைந்தே கழியும், என் ஆவி; கழிந்ததன் பின்
என்னை மறக்கப்பெறாய்; எம்பிரான்! உன்னை வேண்டியதே.

[3]
நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய், நீ; நினையப் புகில்
பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவித்தி;
உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும்
என்னை ஒப்பார் உளரோ? சொல்லு, வாழி!-இறையவனே!

[4]
முழுத்தழல்மேனித் தவளப்பொடியன், கனகக்குன்றத்து
எழில் பரஞ்சோதியை, எங்கள் பிரானை, இகழ்திர்கண்டீர்;
தொழப்படும் தேவர் தொழப்படுவானைத் தொழுத பின்னை,
தொழப்படும் தேவர்தம்மால்-தொழுவிக்கும் தன் தொண்டரையே.

[5]
விண் அகத்தான்; மிக்க வேதத்து உளான்; விரிநீர் உடுத்த
மண் அகத்தான்; திருமால் அகத்தான்; மருவற்கு இனிய
பண் அகத்தான்; பத்தர் சித்தத்து உளான்; பழ நாய் அடியேன்
கண் அகத்தான்; மனத்தான்; சென்னியான் எம் கறைக்கண்டனே.

[6]
பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடி இறக்கும்; இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு, கங்காளராய்,
வரும் கடல் மீள நின்று, எம் இறை நல் வீணை வாசிக்குமே.

[7]
வானம் துளங்கில் என்? மண் கம்பம் ஆகில் என்? மால்வரையும்
தானம் துளங்கித் தலைதடுமாறில் என்? தண்கடலும்
மீனம் படில் என்? விரிசுடர் வீழில் என்?-வேலை நஞ்சு உண்டு
ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே.

[8]
சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடும் ஆகில், அவன் தனை யான்
பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பல்-நாள் அழைத்தால்,
இவன் எனைப் பல்-நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே!

[9]
என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர்? இகலி, உன்னை
நின்னை ஒப்பார் நின்னைக் காணும் படித்து அன்று, நின் பெருமை-
பொன்னை ஒப்பாரித்து, அழலை வளாவி, செம்மானம் செற்று,
மின்னை ஒப்பாரி, மிளிரும் சடைக்கற்றை வேதியனே!

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.113   பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத்  
பண் - திருவிருத்தம்   (திருத்தலம் பொது -தனித் திருவிருத்தம் ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
பவளத்தடவரை போலும், திண்தோள்கள்; அத் தோள் மிசையே
பவளக்குழை தழைத்தால் ஒக்கும், பல்சடை; அச் சடைமேல்
பவளக்கொழுந்து அன்ன, பைம்முக நாகம்; அந் நாகத்தொடும்,
பவளக்கண் வாலமதி, எந்தை சூடும் பனிமலரே.

[1]
முருகு ஆர் நறுமலர் இண்டை தழுவி, வண்டே முரலும்
பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய்! பிணி மேய்ந்து இருந்த
இருகால் குரம்பை இது நான் உடையது; இது பிரிந்தால்,
தருவாய், எனக்கு உன் திருவடிக்கீழ் ஓர் தலைமறைவே!

[2]
மூவா உருவத்து முக்கண் முதல்வ! மிக்கு ஊர் இடும்பை
காவாய்! என, கடை தூங்கு மணியைக் கையால் அமரர்
நாவாய் அசைத்த ஒலி ஒலிமாறியது இல்லை; அப்பால்
தீ ஆய் எரிந்து பொடி ஆய்க் கழிந்த, திரிபுரமே.

[3]
பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து
சந்தித்த பின்னைச் சமழ்ப்பது என்னே-வந்து அமரர் முன்நாள்
முந்திச் செழுமலர் இட்டு, முடி தாழ்த்து, அடி வணங்கும்
நந்திக்கு முந்து உற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே?

[4]
அந்தி வட்டத்து இளங்கண்ணியன், ஆறு அமர் செஞ்சடையான்,
புந்தி வட்டத்து இடைப் புக்கு நின்றானையும்,- பொய் என்பனோ-
சந்தி வட்டச் சடைக்கற்றை அலம்பச் சிறிது அலர்ந்த
நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே?

[5]
உன் மத்தகமலர் சூடி, உலகம் தொழச் சுடலைப்
பல்மத்தகம் கொண்டு, பல் கடைதோறும் பலி திரிவான்;
என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அரியான்
தன் மத்தகத்து ஒர் இளம்பிறை சூடிய சங்கரனே.

[6]
அரைப்பால் உடுப்பன கோவணச் சின்னங்கள்; ஐயம் உணல்;
வரைப்பாவையைக் கொண்டது எக் குடிவாழ்க்கைக்கு? வான் இரைக்கும்
இரைப்பா! படுதலை ஏந்து கையா! மறை தேடும் எந்தாய்!ப்பார் உரைப்பனவே செய்தியால்-எங்கள் உத்தமனே!

[7]
துறக்கப்படாத உடலைத் துறந்து வெந் தூதுவரோடு
இறப்பன்; இறந்தால், இரு விசும்பு ஏறுவன்; ஏறி வந்து
பிறப்பன்; பிறந்தால், பிறை அணி வார்சடைப் பிஞ்ஞகன் பேர்
மறப்பன் கொலோ? என்று, என் உள்ளம் கிடந்து மறுகிடுமே.

[8]
வேரி வளாய விரைமலர்க்கொன்றை புனைந்து, அனகன்,
சேரி வளாய என் சிந்தை புகுந்தான்; திருமுடிமேல்
வாரி வளாய வருபுனல் கங்கைசடை மறிவு ஆய்,
ஏரி வளாவிக் கிடந்தது போலும், இளம்பிறையே.

[9]
கல்-நெடுங்காலம் வெதும்பி, கருங்கடல் நீர் சுருங்கி,
பல்-நெடுங்காலம் மழைதான் மறுக்கினும், பஞ்சம் உண்டு என்று
என்னொடும் சூள் அறும்-அஞ்சல்!-நெஞ்சே! இமையாத முக்கண்
பொன்நெடுங்குன்றம் ஒன்று உண்டுகண்டீர், இப் புகல் இடத்தே.

[10]
மேலும் அறிந்திலன், நான்முகன் மேல் சென்று; கீழ் இடந்து
மாலும் அறிந்திலன்; மால் உற்றதே; வழிபாடு செய்யும்
பாலன் மிசைச் சென்று பாசம் விசிறி மறிந்த சிந்தைக்
காலன் அறிந்தான், அறிதற்கு அரியான் கழல் அடியே!



[11]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list